News August 5, 2025

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் விலை நிலவர விவரம்

image

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆக.05 இன்றைய விலை நிலவர பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டனர். இதில், எள் அதிகபட்சமாக ரூ.8,019க்கும், மக்காச்சோளம் ரூ.2,541க்கும் விற்பனையானது. மேலும், உளுந்து அதிகபட்ச விலையாக ரூ.2,199க்கு விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தை காணலாம்.

Similar News

News December 9, 2025

கள்ளக்குறிச்சி: உங்க நிலத்தை காணமா??

image

கள்ளக்குறிச்சி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்க க்ளிக்<<>> பண்ணி LOGIN செய்து பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க. SHARE பண்ணுங்க

News December 9, 2025

கள்ளக்குறிச்சி: கர்ப்பிணி சென்ற வாகனம் விபத்து..

image

உளுந்தூர்பேட்டை அருகே இறைஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன்யா வயது (32). இவர் தனது மாமனார் சாமிதுரை என்பருடன் வேப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஏழு மாத கர்ப்பிணியான சுகன்யா, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 9, 2025

கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில் 360 பேர் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்பு நேற்று கிராம துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் சார்பில் சம்பள உயர்வு வேண்டியும், பணி நிரந்தரம் வேண்டியும் பொது வேலை நிறுத்தமும் சாலை மறியலும் ஈடுபட்டனர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக 360 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

error: Content is protected !!