News August 5, 2025

கமுதி அருகே 25 ஆடுகளை கடித்து கொன்ற தெரு நாய்கள்

image

கமுதி அருகே வீரமச்சான்பட்டி கிராமத்தில் தெரு நாய்கள் கடித்து 25 ஆடுகள் உயிரிழந்தது. பரசுராமன் என்பவர் 200 ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு, பட்டியில் அடைத்து வைத்திருந்தபோது 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், 25 செம்மறி ஆடுகளை கடித்து கொன்றது. கால்நடை மருத்துவர்கள் உடற்ஆய்வு கூறு செய்தனர். பாதிக்கப்பட்டவர், நிவாரணம் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News December 26, 2025

ராமநாதபுரம்: கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளத்தில் வேலை!

image

ராமநாதபுரம் மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இத்தகவலை SHARE செய்யுங்க.

News December 26, 2025

இராமேஸ்வரத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

image

ராமேஸ்வரம் மார்க்கெட் தெரு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் என்பவரது மகன் சேதுராஜா ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவருக்கு சொந்தமான விடுதியில் மாலை மின் மோட்டாரை இயக்க சென்றபோது அங்கு ஸ்விட்ச் போர்டில் உள்ள வயரில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.

News December 26, 2025

ராமநாதபுர மக்களே கலெக்டரின் மிக முக்கிய அறிவிப்பு.!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள நாளை 27ம் தேதி, நாளை மறுநாள் 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா <>என்று க்ளிக்<<>> செய்து தெரிஞ்சுகோங்க.SHARE iT

error: Content is protected !!