News August 5, 2025

தி.மலை ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

தி.மலை பௌர்ணமி வரும் 08.08.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு ஆட்சியர் க.தர்ப்பகராஜ் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, பௌர்ணமி நாளன்று நகருக்குள் வெளியூரிலிருந்து வரும் ஆட்டோக்கள் கியூ.ஆர் (QR) கோடில்லைாத ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அதிகாரி, காவல்துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.

Similar News

News August 6, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் குறித்து விவரம்

image

காவல்: திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக. 06) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News August 6, 2025

தி.மலை: தாசில்தார் மீது புகார் அளிப்பது எப்படி?

image

திருவண்ணாமலை மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் & அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் தி.மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04175-232619) புகாரளிக்கலாம். *இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்*

News August 6, 2025

தி.மலையில் பேராசிரியர்கள் போரட்டம்

image

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் நிறைவேற்றிட கூறி தமிழக அரசினை வலியுறுத்தி இன்று (ஆகஸ்ட்.06) கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் அரசு கலைக் கல்லூரி நுழைவாயில் முன்பு கோஷமிட்டு முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என்று கூறினார்கள்.

error: Content is protected !!