News August 5, 2025
மகளிர் உரிமைத் தொகை.. விண்ணப்பத்தின் நிலை என்ன?

ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு லட்சக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களது விண்ணப்பங்களின் நிலையை அறிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. kmut.tn.gov.in என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது ஆதார் எண்ணை உள்ளிடவும். ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு OTP வரும். அதனை உள்ளிட்டு உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? என அறியலாம். SHARE IT.
Similar News
News August 6, 2025
திமுக கூட்டணியில் தேமுதிக?.. இன்று ஸ்டாலின் முக்கிய முடிவு

திமுக கூட்டணி தலைவர்களுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தொகுதிப் பங்கீடு, தேர்தல் பரப்புரை, கூட்டணியில் இணையபோகும் புதிய கட்சிகள் குறித்து ஆலோசிக்கும் ஸ்டாலின், தேமுதிகவை கூட்டணியில் இணைப்பது தொடர்பாக கருத்துக் கேட்க இருப்பதாக கூறப்படுகிறது. 9+1 ( ராஜ்யசபா) சீட் வரை தேமுதிகவுக்கு கொடுக்க திமுக உறுதியளித்ததாக தகவல் வெளியான நிலையில், இன்று ஸ்டாலின் முக்கிய முடிவை எடுக்கலாம் என கூறப்படுகிறது.
News August 6, 2025
கூட்டுறவு வங்கியில் 2,000 காலிப்பணியிடங்கள்

கூட்டுறவு வங்கி, சங்கங்களில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29-ம் தேதி வரை இணையதளம் மூலம் இதற்காக
விண்ணப்பங்களை அளிக்கலாம். எழுத்துத் மற்றும் நேர்முக தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
News August 6, 2025
மக்களே, இவர்களை தவிருங்கள்

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க பின்வரும் குணங்களை கொண்டவர்களை தவிருங்கள்: 1)உங்களிடம் பொய் சொல்பவர்கள் 2)உங்களை அவமதிப்பவர்கள்/ மரியாதை கொடுக்காதவர்கள் 3)உங்களை தம் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் 4)உங்களின் தன்னம்பிக்கையை கெடுப்பவர்கள்/ தலைகுனிய செய்பவர்கள். வேறு எந்த மாதிரி நபர்களை தவிர்க்க வேண்டும்? உங்கள் அனுபவத்தில் இருந்து சொல்லுங்களேன்.