News August 5, 2025
புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அந்தியூர் புதுப்பாளையத்தில் வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை குருநாதசாமி கோவில் தேர் திருவிழா கால்நடை சந்தையுடன் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் விழாவிற்கு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சார் ஆட்சியர் சிவானந்தம், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
Similar News
News August 6, 2025
ஈரோடு மக்களே மோசடி: காவல்துறை எச்சரிக்கை!

சமீப காலமாக இணையவழி மோசடிகள் அதிகரித்துள்ளன. இதில் உங்களுக்கு வங்கியில் இருந்து ரிவாட் பாய்ண்ட்ஸ் வந்துள்ளது என குருஞ்செய்தி மூலம் தகவல் வருகிறது. இதை க்ளிக் செய்யும்போது மோசடிக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. எனவே இது தொடர்பாக வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள், செயலிகள், மின்னஞ்சல்களை திறப்பதோ, install செய்யவோ வேண்டாம் என, ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவுத்தியுள்ளது. இதுகுறித்து புகார் அளிக்க 1930.
News August 6, 2025
சுதந்திர தின விழா குறித்து ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கத்தில் நேற்று, ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுவது குறித்தான ஆலோசனைக் கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அரபித் ஜெயின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News August 5, 2025
காவல்துறையினருக்கு இலவச மருத்துவ முகாம்

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.சுஜாதாவின் உத்தரவின் பேரில், ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் நலன் கருதி இன்று (05.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் இலவச இயற்கை மற்றும் யோகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர்.