News August 5, 2025

தனி நபர் எவ்வளவு நகைக் கடன் வாங்கலாம்?

image

தங்கம், வெள்ளி நகைக் கடன் வாங்குபவர்களுக்கு ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயித்துள்ளது. அதன்படி, ஒருவர் 1 கிலோ வரை தங்க நகைகள், 50 கிராம் வரை தங்க நாணயங்களை அடமானம் வைக்கலாம். இதேபோல், 10 கிலோ வரை வெள்ளி நகைகள், அரை கிலோ வரை வெள்ளி நாணயங்களை அடகு வைக்க முடியும். கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். மேலும், தங்கத்திற்கு அதன் மதிப்பில் 85% வரை கடன் வாங்க முடியும். SHARE IT.

Similar News

News August 5, 2025

அனல் பறக்கும் THE HUNDRED TOURNAMENT..!

image

ஐபிஎல் போன்று இங்கிலாந்தில் நடைபெறும் 100 பால் தொடர் இன்று முதல் துவங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் மொத்தம் 34 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெறுகின்றன. ஸ்டீவ் ஸ்மித், கிளாஸன், டேவிட் வார்னர் போன்ற பல உலகத்தர வாய்ந்த வீரர்கள் இத்தொடரில் விளையாடவுள்ளதால் ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News August 5, 2025

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: ஆக.8-ல் விசாரணை

image

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு, ஆக.8-ல் SC-யில் விசாரணைக்கு வரவுள்ளது. இதுபற்றி இன்று CJI பி.ஆர்.கவாய் அமர்வில் கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்து, இந்த தகவல் வெளியாகியுள்ளது. 2024-க்குள் மாநில அந்தஸ்து தரவேண்டும் என மத்திய அரசை SC அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News August 5, 2025

திமுக ஆட்சிக்கு பிரேமலதா கொடுத்த மார்க் இதுதான்!

image

நிறை குறைகள் சரிசமமாக உள்ளதால் திமுக ஆட்சிக்கு 50 மார்க் தரலாம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என கூறிய அவர், ஆணவப்படுகொலைகள், லாக் அப் மரண சம்பவங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்தார். சட்டம் – ஒழுங்கை கையில் வைத்திருக்கும் CM ஸ்டாலின் இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

error: Content is protected !!