News August 5, 2025

BREAKING: கவின் கொலை.. யாரும் தப்பிக்க கூடாது!

image

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கை நெல்லை நீதிபதி தலைமையில் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதில் இன்று, கவின் கொலை வழக்கில் யாரும் தப்பிக்க கூடாது. முறையாக விசாரணை நடத்தி 8 வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News August 6, 2025

நாரணம்மாள்புரம் பகுதியில் குவாரிக்கு தடையில்லா சான்று

image

தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது சலீம் பாதுஷாவுக்கு நாரணம்மாள்புரம் பகுதியில் ஸ்டோன் மற்றும் கிராவல் குவாரி நடத்துவதற்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://parivesh.nic.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஆணையம் தெரிவித்துள்ளது.

News August 6, 2025

சுர்ஜித், எஸ்ஐ சரவணனை காவலில் விசாரிக்க சிபிசிஐடி மனு

image

நெல்லையில் கவின் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் எஸ்ஐ சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். டிஎஸ்பி ராஜ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோர் நெல்லை மாவட்ட 2-வது கூடுதல் மற்றும் அமர்வு தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (06.08.2025) மனு தாக்கல் செய்தனர்.

News August 6, 2025

நெல்லை: யோகா இயற்கை மருத்துவ படிப்பிற்கு அழைப்பு

image

நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, 2025-26 கல்வியாண்டிற்கான பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்டப்படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் www.tnhealth.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பைப் பதிவிறக்கம் செய்யலாம். *ஷேர்*

error: Content is protected !!