News August 5, 2025

தஞ்சையில் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

image

தஞ்சை பழைய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள 50-க்கும் அதிகமான கடைகளில் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என மாநகராட்சி அலுவலா்கள் நேற்று மாலை சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையில் சுமார் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பதுக்கி வைத்திருந்த வியாபாரிகளுக்கு ரூ.6,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News

News August 5, 2025

தஞ்சை மக்களே எச்சரிக்கை, ஆட்சியர் பெயரில் மோசடி?

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ப்ரியங்கா பங்கஜம் பெயரிலோ அல்லது புகைப்படத்தினை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசியில் பண மோசடி ஈடுபடும் நபர்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம். வாட்ஸ்அப், முகநூல் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடங்களில் பணம் கேட்டோ – வங்கி விவரங்கள் குறித்து அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் சைபர் கிரைமில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் தகவலை SHARE பண்ணுங்க!

News August 5, 2025

தஞ்சை மாவட்ட டிஎஸ்பி-க்களின் தொடர்பு எண்கள்

image

▶️ தஞ்சை டவுன் – சோமசுந்தரம் (04362-251266)
▶️ வல்லம் – கணேஷ்குமார் (04362-277791)
▶️ தஞ்சை ரூரல் – முருகவேல் (04374-222711)
▶️ திருவையாறு – அருள்மொழியரசு (04362-277340)
▶️ கும்பகோணம் – அங்கித் சிங் (0435-2403241)
▶️ திருவிடைமருதூர் – ஜி.கே.ராஜு (0435-2462255)
▶️ பட்டுக்கோட்டை – ரவிச்சந்திரன் (04373-255567)
▶️ ஒரத்தநாடு – கார்த்திகேயன் (04372-233280) SHARE பண்ணுங்க!

News August 5, 2025

தஞ்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் (27). டிரைவரான இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை செல்வநாதன் (38) என்ற நபர் கண்டித்த போது, இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சந்தோஷ் மற்றும் அவரது நண்பன் அமரேஷ் இணைந்து செல்வநாதனை வெட்டிப் படுகொலை செய்தனர். இவ்வழக்கை விசாரித்த தஞ்சை நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

error: Content is protected !!