News August 5, 2025

ராம்நாடு: அரசு வேலை.. ரூ.68,000 வரை சம்பளம்!

image

ராமநாதபுரம் இளைஞர்களே, தமிழக சுற்றுசூழல் துறையில் புராஜக்ட் அசோசியேட், கணக்கு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு என பணிக்கேற்ற தகுதியுடையோர் <>இந்த தளத்திற்கு<<>> சென்று விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.28,500 – 68,400 வரை வழங்கப்படும். ஆகஸ்ட் 15க்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் நபர்களுக்கு உ

Similar News

News August 6, 2025

ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி மாநில அளவில் சாதனை

image

கமுதி அருகே செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் 7ம் வகுப்பு மாணவி நிவேதா ஸ்ரீ, திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 2ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவிக்கு நேற்று பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மாணவியை பாராட்டி சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

News August 6, 2025

ராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஆகஸ்ட் 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டு உள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.

News August 5, 2025

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி

image

முதுகுளத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரவேல் (50) இவர் கடந்த 1ம் தேதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவருக்கு நிவாரணம் பெற கடந்த 3 நாளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காளான் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து அரசு நிதியை சித்திரவேல் மனைவி சுமதியிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

error: Content is protected !!