News August 5, 2025

பெரம்பலூர்: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசிடம் வேலை!

image

பெரம்பலூர் இளைஞர்களே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 126 காலிபணியிடங்கள் நிறப்பப்படவுள்ளது. இதில் டிகிரி, பொறியியல், MBA என பல்வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்<<>>. மேலும் இந்த பணிகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News August 5, 2025

மருந்து கடை முன்பு இறந்து கிடந்த வாலிபர்

image

பெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள ஒரு மருந்துக் கடை முன்பு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

News August 5, 2025

போக்சோ வழக்கில் இளைஞருக்கு கடுங்காவல் சிறை

image

பெரம்பலூர் மாவட்டம் பீல்வாடி கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை குழந்தை திருமணம், கற்பழிப்பு செய்ததாக அஜித் (22) என்பவரை போலீசார் கைது செய்து, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு போக்சோ (ம) குழந்தை திருமண வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நேற்று அஜித்துக்கு 42 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை (ம) 1,50,000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது

News August 5, 2025

பெரம்பலூர்: கிராம உதவியாளர் பணி-APPLY NOW

image

வேப்பந்தட்டை, பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர் உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு <>இந்த லிங்கிள் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம்<<>> செய்து, 11.08.2025 தேதிக்குக்குள் பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

error: Content is protected !!