News August 5, 2025

ராமநாதபுரத்தில் 8 காவல் நிலையங்கள் தரம் உயர்வு

image

எமனேஸ்வரம், துறைமுகம் (ராமேஸ்வரம்), பாம்பன், திருப்புல்லாணி, திருஉத்திரகோச மங்கை, பேரையூர், இளம்செம்பூர், எஸ்பி பட்டினம் சார்பு ஆய்வாளர் காவல் நிலையங்கள், ஆய்வாளர் காவல் நிலையங்களாக தர நிலை உயர்த்தி கவர்னர் உத்தரம்படி அரசின் கூடுதல் தலைமை செயல தீரஜ்குமார் நேற்று ( 04.8.2025) அரசாணை பிறப்பித்துள்ளார்.

Similar News

News August 5, 2025

கமுதி அருகே 25 ஆடுகளை கடித்து கொன்ற தெரு நாய்கள்

image

கமுதி அருகே வீரமச்சான்பட்டி கிராமத்தில் தெரு நாய்கள் கடித்து 25 ஆடுகள் உயிரிழந்தது. பரசுராமன் என்பவர் 200 ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு, பட்டியில் அடைத்து வைத்திருந்தபோது 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், 25 செம்மறி ஆடுகளை கடித்து கொன்றது. கால்நடை மருத்துவர்கள் உடற்ஆய்வு கூறு செய்தனர். பாதிக்கப்பட்டவர், நிவாரணம் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

News August 5, 2025

9 மீனவர்களுக்கு 19ஆம் தேதி வரை இலங்கையில் காவல் நீட்டிபு

image

பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு நாட்டுப்படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் 29ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் வழக்கு இன்று புத்தளம் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, 9 பேருக்கும் வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவிட்டார்.

News August 5, 2025

ராமேஸ்வரம் பேருந்து நிறுத்தத்தில் கிடந்த சடலம்

image

ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் பயணிகள் அமரும் நிழற்குடையில் 70 வயது மதிக்கத்தக்க பெயர் முகவரி தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்த போலீசார், உடலை மீட்டு காவலர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைகு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தவர். மேலும், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!