News August 5, 2025
பூஜை அறையில் இந்த 3 விஷயங்கள் இருக்கா..

வீட்டின் பூஜை அறையில் இருக்கும் இந்த பொருள்கள் எதிர்மறை ஆற்றலை கொடுக்கின்றன.
*பூஜை அறையில் முன்னோர்களின் படங்களை வைக்கக்கூடாது. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
*வாடிய, காய்ந்த பூக்களை அப்படியே பூஜை அறையில் மறந்தும் போட்டு வைக்காதீர்கள். அது வாஸ்துப்படி மிகவும் அசுபமானது.
*சங்குகளை கண்டிப்பாக வைத்திருக்ககூடாது. அது வாஸ்து தோஷத்தை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. SHARE IT.
Similar News
News August 5, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

நேற்று உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 80,585 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 111 புள்ளிகள் குறைந்து 24,611 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மீண்டும் டிரம்ப் வரியை உயர்த்த உள்ளதாக எச்சரித்துள்ளதால் அதன் தாக்கம் பங்குசந்தையில் நிலவுவதாக கூறப்படுகிறது.
News August 5, 2025
சற்றுமுன்: நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை

ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
News August 5, 2025
ஓரணியில் தமிழ்நாடு.. அழைப்பு விடுத்த திமுக

தமிழ்நாட்டின் உரிமை போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுப்போம் என்று தொண்டர்களுக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைய வேண்டும். நம் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஆக.11,12-ல் ஸ்டாலின், கோவை, திருப்பூரில் ஆய்வு செய்யவிருக்கும் நிலையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.