News August 4, 2025
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கண்காட்சி!

நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில், 11-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 7 அன்று கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி பொருட்கள், தள்ளுபடி மானியத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 28, 2025
நாமக்கல்: ரூ.30,000 சம்பளத்தில் EB வேலை!

நாமக்கல் மக்களே.., மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech, ME படித்தவர்கள் விண்ணபிக்கலாம். <
News August 28, 2025
நாமக்கல்: கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாக இருந்து வந்த நிலையில் நேற்று(ஆக.27) நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.89-க்கும், முட்டைக் கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
News August 28, 2025
நாமக்கல்லில் அடுத்தடுத்து மழை வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. எனவே வரும் 4 நாட்களில் காற்று மேற்கு, தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு, 12 முதல் 16 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இன்று(ஆக.28) 3 மி.மீ, நாளை(ஆக.29) 3 மி.மீ, வருகிற 30ஆம் தேதி, 6 மி.மீ, 31ஆம் தேதி 1 மி.மீ எனும் அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கால்நடை மருத்துவக்கல்லுாரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.