News August 4, 2025
நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிடிவாரண்ட் பிறப்பித்து 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் டெல்லியில் இருப்பதாக அவரது தாய் மனு அளித்தார். மீரா மிதுனை கைது செய்து ஆக. 11-இல் ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News August 25, 2025
சென்னையில் மின்தடை..!

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்து. அதன்படி பாரிவாக்கம், தேனாம்பேட்டை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், தாம்பரம் போன்ற பகுதிகளில் நாளை(ஆக.26) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி- பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இருக்க மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News August 25, 2025
BIG NEWS: சென்னையில் 2 பேர் பரிதாப பலி

சென்னையில் விநாயகர் சிலை அமைக்க பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதவரத்தில் பந்தல் அமைக்கும் போது பிரசாந்த் என்பவர் உயிரிழந்துள்ளார். பூவிருந்தவல்லி சொன்னீர்குப்பத்தில் விநாயகர் சிலைக்கு பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து பரத் என்பவர் உயிரிழந்துள்ளார். பண்டிகை காலங்களில் உஷாரா இருங்க.
News August 25, 2025
BREAKING: மயிலாப்பூர் ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது

தேசிய ஆசிரியர் விருது, ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பையும், பள்ளிக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் மத்திய அரசின் விருதாகும். ஒவ்வொரு ஆண்டும் செப்.5 ஆசிரியர் தினத்தன்று குடியரசுத் தலைவரால் இது வழங்கப்படுகிறது. மயிலாப்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி மற்றும் திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் தமிழகத்திலிருந்து இந்தாண்டு தேர்வாகியுள்ளனர்.