News August 4, 2025

குமரி அருகே கல்லூரி மாணவி தற்கொலை

image

ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் பகவதியப்பன். இவரது மகள் மனிஷா (23). தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்தார். இவர் நேற்று தந்தையிடம் ஆண்ட்ராய்டு போன் வாங்கி தரும்படி கேட்டார். அதற்கு கோவில் திருவிழா முடிந்த பின் வாங்கித் தருவதாக தந்தை கூறிய நிலையில் நேற்று இரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 17, 2025

குமரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

கன்னியாகுமரி மக்களே; வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் கன்னியாகுமரி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000482, 9445000483 என்ற எண்களில் புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News November 17, 2025

குமரி: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

image

குமரி மக்களே; இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 17, 2025

குமரி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

நாகர்கோவில், மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறவுள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கப்புரம், செட்டிக்குளம் சந்திப்பு, சர்குணவீதி, ராமன்புதூர், சவேரியார் கோவில் சந்திப்பு, சரலூர், வேதநகர் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. SHARE IT

error: Content is protected !!