News July 11, 2025
தேனியில் வரதட்சனை கொடுமை பெண் உயிரிழப்பு

தேனி , அரண்மனைபுதூர் கிழக்கு தெருவை சேர்ந்த பெரியகருப்பன் என்பவரது மகள் முத்துமணி. இவர் திருமணம் முடிந்து கணவர் வீட்டார் வரதட்சனை கேட்டு தொல்லை செய்ததால், அவரது தந்தை வீட்டில் குடியிருந்து வரும் நிலையில் மன உளைச்சலில் இருந்த முத்துமணி அரளி விதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறப்பு சம்மந்தமாக தந்தை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை.
Similar News
News November 14, 2025
தேனி: மனைவி பிரிவால் இளைஞர் எடுத்த முடிவு

போடி துரைராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம் (31). இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்ததன் காரணமாக அவரது மனைவி கோபித்துக் கொண்டு கணவரை பிரித்து சென்றுள்ளார். இதன் காரணமாக மன வேதனையில் இருந்து வந்த சிவானந்தம் நேற்று (நவ.13) மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு.
News November 14, 2025
தேனி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

தேனி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க மறக்காம SHARE செய்யுங்க…
News November 14, 2025
வாக்காளர்களுக்கு உதவி மையம்: கலெக்டர் தகவல்

வாக்காளர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு உதவி மைய முகாம்களானது தேனி மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணியில் ஈடுபட்டுள்ள 1226 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம், வாக்காளர்கள் தங்களது பகுதிகளிலே ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையங்களுக்கு சென்று கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி செய்யும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.


