News April 6, 2024
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு துப்பாக்கிகள் ஒப்படைப்பு

மக்களவைத் தொகுதி தேர்தலை முன்னிட்டு, கள்ளக்குறிச்சியில் உரிமம் பெற்றவர்களின் 152 துப்பாக்கிகளை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. உரிமம் பெற்றவர்களின் துப்பாக்கிகளை கள்ளக்குறிச்சி உட்கோட்டத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் 82 துப்பாக்கிகள், திருக்கோவிலூரில் 41, உளுந்தூர்பேட்டையில் 29 ஆக மொத்தம் 152 துப்பாக்கிகளை போலீஸார் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
Similar News
News March 25, 2026
கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள பேராயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன்(55). தொழிலாளியான இவர், நேற்று முன் தினம் தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த திருமலை(55) என்பவருடன் திருகோவிலூர் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் துக்க நிகழ்வில் கலந்து கொள்ள பைக்கில் புறப்பட்டார். அப்போது, அரும்பாக்கம், வீரன் கோவில் பகுதியில் எதிரே வந்த பைக் மோதியதில் குபேந்திரன் உயிரிழந்தார்.
News March 25, 2026
கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள பேராயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன்(55). தொழிலாளியான இவர், நேற்று முன் தினம் தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த திருமலை(55) என்பவருடன் திருகோவிலூர் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் துக்க நிகழ்வில் கலந்து கொள்ள பைக்கில் புறப்பட்டார். அப்போது, அரும்பாக்கம், வீரன் கோவில் பகுதியில் எதிரே வந்த பைக் மோதியதில் குபேந்திரன் உயிரிழந்தார்.
News March 24, 2026
தேர்தல் தேனீ விழிப்புணர்வு விளம்பரப் பதாகை வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் தேனீ விழிப்புணர்வு விளம்பரப் பதாகையை வெளியிட்டுள்ளனர். இந்த நிகழவில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (மார்ச்.24) வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா மற்றும் உதவி ஆட்சியர் பயிற்சி பிரியதர்ஷினி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


