News July 11, 2025
திருப்பூர்: நடிகர் சிவா பேட்டி

பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் அமைந்துள்ள அருணோதயா தியேட்டரில் பறந்து போ படம் திரையிடப்பட்டது. இந்தநிலையில் ரசிகர்களிடம் திரைப்படத்தின் கருத்துக்களை கேட்க நடிகர் சிவா அங்கு வந்தார். மேலும் திரைப்படத்தை பார்த்த பொதுமக்களிடம் திரைப்படம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர் கூறுகையில், உலக அரசியலில் தான் ஈடுபடப் போவதாகவும், நானே அகில உலக சூப்பர் ஸ்டார் என்றும் நகைச்சுவையாக அவர் தெரிவித்தார்.
Similar News
News November 9, 2025
திருப்பூரில் கைது! ஏன் தெரியுமா?

அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி, கணேசபுரம் வைஷ்ணவி கார்டனில், வெளிநாட்டினர் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் படி நேற்று முன்தினம் டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு உள்ளிட்ட போலீசார் வீடுகளில் சோதனை நடத்தினர். அதில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட நான்கு பேர் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
News November 9, 2025
திருப்பூரில் இங்கெல்லாம் மின்தடை

உடுமலை இந்திரா நகர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை நவ.10-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே, உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன்புதூர். ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், தூங்காவி, ராமேகவுண்டன் புதூர், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூர் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.
News November 9, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து போலீசார் விபரம்!

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கவும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாநகர உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில், இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய போலீசார், பட்டியல் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


