News July 10, 2025

இந்திய டென்னிஸ் வீராங்கனை சுட்டுக் கொலை… SHOCKING

image

இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்(25) என்பவரை, அவரது தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் அவரது வீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது. 3 முறை சுடப்பட்டு ராதிகா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரது தந்தையை போலீஸ் கைது செய்துள்ளனர். ராதிகா ரீல்ஸ் மோகத்தில் இருந்தது தந்தைக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Similar News

News July 11, 2025

கோலிவுட்டில் ஜாதி இல்லையா? கலையரசன் பரபரப்பு Statement!

image

தமிழ் சினிமாவில் ஜாதி இல்லை என சொல்கிறார்கள். ஆனால் அது மிக மோசமாக இருக்கிறது. இயக்குநர் ரஞ்சித் உடன் இருப்பதால் எனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என கலையரசன் கூறியுள்ளது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. அவருக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். பல முற்போக்கு கருத்துக்களை பேசி பாடம் எடுக்கும் கோலிவுட்டிலும் இப்படியா என நெட்டிசன்கள் கேள்வி கேட்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News July 11, 2025

மாலை 5 மணிக்கு.. சபரிமலை பக்தர்களின் கவனத்திற்கு

image

தேவபிரசன்னத்தில் கூறப்பட்டதன் அடிப்படையில் சபரிமலையின் மாளிகப்புரத்தம்மன் கோயிலில் நவக்கிரக கோயில் கட்டப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதன் பிரதிஷ்டைக்காக, இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. ஞாயிறு காலை 11 மணிக்கு நவக்கிரக பிரதிஷ்டை நடத்தப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை திறக்கப்படும்.

News July 11, 2025

பங்குச்சந்தைகள் சரிவால் முதலீட்டாளர்கள் கலக்கம்!

image

இந்தியப் பங்குச்சந்தைகள் 2-வது நாளாக இன்றும்(ஜூலை 11) சரிவைக் கண்டுள்ளன. வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 249 புள்ளிகள் சரிந்து 82,941 புள்ளிகளிலும், நிஃப்டி 67 புள்ளிகள் சரிந்து 25,288 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. குறிப்பாக TCS, Infosys, Tech Mahindra உள்ளிட்ட முக்கிய ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

error: Content is protected !!