News July 10, 2025
கடலூர்: விபத்து தொடர்பாக 11 பேரிடம் விசாரணை தொடக்கம்

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்து சம்பவத்தில் கைதான கேட் கீப்பர் உட்பட 11 பேரிடம் தனித்தனியே விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி ரயில்வே கோட்ட மூத்த துணை பாதுகாப்பு அதிகாரி மகேஸ்குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் விபத்து நடப்பதற்கு முன் கொடுக்கப்பட்ட தகவல்கள், விபத்து நடந்ததும் வந்த முதல் தகவல் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
Similar News
News July 11, 2025
பண்ருட்டியில் நாளை எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

மக்களைக் காப்போம்-தமிழகத்தை மீட்போம் என, அதிமுக., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நாளை (ஜூலை 11) கடலூர், பண்ருட்டி தொகுதிகளில் பழனிசாமி கலந்து கொள்ளும் பிரச்சாரம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிமுக.,வினர் சார்பில் கடலூர், பண்ருட்டி தொகுதிகளில் அவரை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
News July 11, 2025
கடலூர்: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் <
News July 11, 2025
திருச்சி: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (2/2)

▶️ 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
▶️ தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
▶️ ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
▶️ கூடுதல் விவரங்களுக்கு <
▶️ இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்