News July 10, 2025

மல்லை சத்யா வெளியேறலாம்.. வைகோ திடீர் காட்டம்

image

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா வெளியேறினால் எந்த தாக்கமும் கட்சிக்கு இருக்காது என வைகோ தெரிவித்துள்ளார். துரை வைகோ, மல்லை சத்யா இடையே சமரசம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், துரோகம் இழைத்துவிட்டு கட்சியில் இருந்து வெளியேறிய சிலருடன் சத்யா கை கோர்த்து செயல்படுவதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். மல்லை சத்யா இனி தனது விருப்பப்படி முடிவெடுக்கலாம் எனவும் வைகோ கூறியுள்ளார்.

Similar News

News July 11, 2025

மல்லை சத்யா திமுகவில் இணைய உள்ளதாக தகவல்

image

மல்லை சத்யா, துரை வைகோ இடையே இருந்த மோதல் தற்போது வைகோ, மல்லை சத்யா இடையேயான மோதலாக மாறியுள்ளது. பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததுபோல் மல்லை சத்யா எனக்குத் துரோகம் செய்துவிட்டார் என வைகோ பேசியுள்ளார். இந்நிலையில், வைகோவின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது எனவும், அதிர்ச்சியை அளிப்பதாகவும் கூறியுள்ள மல்லை சத்யா, விரைவில் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

News July 11, 2025

‘டம்மி வாய்ஸ்’ ஆக EPS இருக்க அவசியமில்லை: நயினார்

image

பாஜகவுக்கு டப்பிங் வாய்ஸ் போல பேசிய இபிஎஸ், தற்போது ஒரிஜினல் வாய்ஸ் ஆகவே பேச தொடங்கிவிட்டார் என CM ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், பாஜகவின் ‘டம்மி வாய்ஸ்’ ஆக இபிஎஸ் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், என்ன கருத்தை பேச வேண்டுமோ அதைத்தான் அவர் பேசுவதாக தெரிவித்தார். அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த நாள் முதல் CM ஸ்டாலினுக்கு ஜுரம் வந்துவிட்டதாக கூறினார்.

News July 11, 2025

அறநிலையத்துறை கல்லூரிகள்: EPS விளக்கம்

image

கோயிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள் என அண்மையில் இபிஎஸ் பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், விழுப்புரத்தில் பேசிய இபிஎஸ், அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டினால் மாணவர்களுக்கு முழு வசதியும் கிடைக்காது. அறநிலையத்துறை தான் அனைத்துக்கும் நிதி ஒதுக்க வேண்டும். ஆகவே மாணவர்களின் நலன் கருதியே அரசு கலைக்கல்லூரியாக கொண்டு வர தான் சொன்னதாக விளக்கமளித்தார்.

error: Content is protected !!