News July 10, 2025
கண்ணை மறைத்த காமம்.. கணவன் கொடூரக் கொலை!

முறையற்ற உறவால் கணவன்கள் கொல்லப்படும் கொடூர சம்பவங்கள் தொடர்கதையாக நீண்டு கொண்டே இருக்கின்றன. உ.பி.யில் மனைவி ஷீபா, ஃபர்மான் என்பவருடன் நெருங்கிப் பழகியதை கணவன் இம்ரான் கண்டித்துள்ளார். இதனால், காதலனுடன் சேர்த்து கணவனை தீர்த்துக் கட்டிய ஷீபா, கழுத்தை அறுத்து தலையில்லாத உடலை சாக்கடையில் வீசியுள்ளார். போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிய அவர், தற்போது காதலனுடன் கம்பி எண்ணுகிறார்.
Similar News
News July 11, 2025
மல்லை சத்யா திமுகவில் இணைய உள்ளதாக தகவல்

மல்லை சத்யா, துரை வைகோ இடையே இருந்த மோதல் தற்போது வைகோ, மல்லை சத்யா இடையேயான மோதலாக மாறியுள்ளது. பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததுபோல் மல்லை சத்யா எனக்குத் துரோகம் செய்துவிட்டார் என வைகோ பேசியுள்ளார். இந்நிலையில், வைகோவின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது எனவும், அதிர்ச்சியை அளிப்பதாகவும் கூறியுள்ள மல்லை சத்யா, விரைவில் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
News July 11, 2025
‘டம்மி வாய்ஸ்’ ஆக EPS இருக்க அவசியமில்லை: நயினார்

பாஜகவுக்கு டப்பிங் வாய்ஸ் போல பேசிய இபிஎஸ், தற்போது ஒரிஜினல் வாய்ஸ் ஆகவே பேச தொடங்கிவிட்டார் என CM ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், பாஜகவின் ‘டம்மி வாய்ஸ்’ ஆக இபிஎஸ் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், என்ன கருத்தை பேச வேண்டுமோ அதைத்தான் அவர் பேசுவதாக தெரிவித்தார். அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த நாள் முதல் CM ஸ்டாலினுக்கு ஜுரம் வந்துவிட்டதாக கூறினார்.
News July 11, 2025
அறநிலையத்துறை கல்லூரிகள்: EPS விளக்கம்

கோயிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள் என அண்மையில் இபிஎஸ் பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், விழுப்புரத்தில் பேசிய இபிஎஸ், அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டினால் மாணவர்களுக்கு முழு வசதியும் கிடைக்காது. அறநிலையத்துறை தான் அனைத்துக்கும் நிதி ஒதுக்க வேண்டும். ஆகவே மாணவர்களின் நலன் கருதியே அரசு கலைக்கல்லூரியாக கொண்டு வர தான் சொன்னதாக விளக்கமளித்தார்.