News July 10, 2025
தர்மபுரி: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்கிறது.இதற்கான KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வர். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்றம்/ ஆட்சியர் அலுவலகத்தை(04342231500) தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க. <<17015836>>தொடர்ச்சி<<>>
Similar News
News November 15, 2025
தருமபுரி: டூ-வீலர் விபத்தில் இளைஞர் பலி!

தருமபுரி: மகேந்திரமங்கலம் அடுத்த பொம்மனுார் கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் (24) அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பைக்கில் சென்றவர், முல்லாசன-ஹள்ளி அருகே எதிர்பாராமல் முள்வேலியில் மோதி விபத்துக்குள்ளானர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 15, 2025
தருமபுரியில் 3 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்!

தருமபுரியில் வரும் நவ.18, 19, 20 ஆகிய தேதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என ஆட்சியர் சதீஸ் அறிவித்துள்ளார். அதன்படி, பாலக்கோடு, பாப்பாரபட்டி, காரிமங்கலம், மாரண்டஹள்ளி பேரூராட்சிகளிலும், பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட 68 பஞ்.,களிலும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
தருமபுரியில் ஐடிஐ தேர்வு நடக்கும் இடங்கள்!

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஐடிஐ லெவல் 2 தேர்வு நாளை (நவ.15) பி .பள்ளிப்பட்டி சீனிவாசா பொறியியல் கல்லூரி, பென்னாகரம் நல்லனூர் ஜெயம் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. நாளை முற்பகல் 9.30 மணி முதல் 12. 30 மணி வரை மற்றும் பிற்பகல் 2:30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும் இந்த தேர்வில், 250 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.


