News April 6, 2024
நீலகிரி: ரூ.6,000 லஞ்சம் கேட்ட விஏஓ கைது

ஊட்டி அருகே கம்பட்டியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவருக்கு 6.5 சென்ட் பூர்வீக நிலம் உள்ளது. சிட்டாவில் பெயர் சேர்க்க விஏஓ கற்பகம் என்பவரை அணுகி உள்ளார். அவர் ரூ.6,000 லஞ்சம் கேட்கவே, ஜெய்கணேஷ் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார், பணம் கொடுக்கும்போது கையும் களவுமாக விஏஓ மற்றும் டிரைவர் ஆகிய 2 பேரை பிடித்து கைதுசெய்தனர்.
Similar News
News September 19, 2025
நீலகிரி: யானை தாக்கி முதியவர் பலி!

நீலகிரி மாவட்டத்தில் மனித – விலங்கு மோதல் அதிகரித்து வரும் நிலையில், மசினகுடி பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 71 வயது மதிக்கத்தக்க மேத்தா என்பவரை காட்டு யானை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 19, 2025
நீலகிரி: எங்கெல்லாம் மின்தடை? தெரியுமா!

ஊட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பிங்கர்போஸ்ட், காந்தல், ஹில்பங்க், கோடப்பமந்து, இத்தலார், ஆடாச்சோலை, எப்பநாடு, மரகல், கோழிப்பண்ணை, தாவனை, உள்ளத்தி, சக்தி நகர், தேனாடு, கம்பை, எம்.பாலடா, கடநாடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
News September 19, 2025
ஊட்டியில் அரசு பஸ் விபத்தால் பயணிகள் அதிர்ச்சி!

ஊட்டி நொண்டிமேடு பகுதியில் இன்டர்லாக் கற்களால் ஆன சரிவான சாலையில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. நேற்று முன்தினம் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை ஒரு அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தால், அப்பகுதி பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.