News July 10, 2025

குமரி மாவட்டத்தில் 1,100 தொழிற்சங்கத்தினர் கைது

image

மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து நாடு முழுவதும் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பறக்கை, குலசேகரம், அருமனை, மார்த்தாண்டம் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் 330 பெண்கள் உட்பட 1100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 17, 2025

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இலங்கை அருகே நீடித்து வருகிறது. இக்காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல்பகுதியை நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

குமரியில் மழைச் சேதத்தை தடுக்க தயார் நிலை – மேயர் பேட்டி

image

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது; நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மழை சேதங்களை தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே கடந்து சில மாதங்களுக்கு முன்பே இருந்து கால்வாய் நிகழ்ச்சி சீரமைக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என்றார்.

News November 17, 2025

குமரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

கன்னியாகுமரி மக்களே; வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் கன்னியாகுமரி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000482, 9445000483 என்ற எண்களில் புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!