News July 10, 2025
மதுரையில் ஒரே நாளில் 2149 பேர் கைது

மதுரையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட 16 கோரிக்கைகளை வலியுறுத்த முன் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., தொ.மு.ச., எல்.பி.எப்., எச்.எம்.எஸ்., உட்பட 10 தொழிற்சங்கங்கள் இணைந்து பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 846 பெண்கள் உட்பட 2149 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News July 10, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (10.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 10, 2025
வேலைவாய்ப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
எழுதப்படிக்க தெரிந்தோர் முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
” பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் 29க்குள் அலுவலகத்தில் வழங்க வேண்டும் ” என்று மதுரை வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
News July 10, 2025
குமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில் வழித்தட மாற்றம்

மதுரை கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக, ஜூலை 11 அன்று காலை 05:15 மணிக்கு புறப்படும் குமரி-ஹைதராபாத் சிறப்பு ரயில் (07229) மதுரை, கொடைக்கானல் சாலை மற்றும் திண்டுக்கல்லில் நிற்காமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக இந்த ரயில் திருப்பி விடப்படும். அருப்புக்கோட்டை, மானாமதுரை சந்திப்பு, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் நின்று செல்லும்.