News July 10, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶ இயல்: அரசியல் ▶அதிகாரம்: கல்வி ▶குறள் எண்: 391 ▶குறள்: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. ▶ பொருள்: ஒருவன் கற்றற்குரிய நூல்களைப் பழுதறக் கற்றல் வேண்டும். அப்படிக் கற்றபிறகு அக்கல்விக்கேற்பத் தக்கபடி ஒழுகுதல் வேண்டும்.

Similar News

News July 10, 2025

அழகான சருமத்துக்கு டாப் 5 டிப்ஸ்…

image

அழகான சருமம் வேண்டும் என்ற யாருக்குதான் ஆசை இல்லை. ஆனால் தூசி, மாசு, உணவு & வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக சருமத்தில் பருக்கள், எண்ணெய் பசை, Black Heads போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இவற்றை சரி செய்ய சரும பராமரிப்பு போதும். க்ரீம்கள், பேஸ்வாஷ் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தினால், மேலும் பிரச்னைகள் தான் எழும். உங்களுக்கும் நல்ல அழகான சருமம் வேண்டும் என்றால் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.

News July 10, 2025

மல்லை சத்யா வெளியேறலாம்.. வைகோ திடீர் காட்டம்

image

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா வெளியேறினால் எந்த தாக்கமும் கட்சிக்கு இருக்காது என வைகோ தெரிவித்துள்ளார். துரை வைகோ, மல்லை சத்யா இடையே சமரசம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், துரோகம் இழைத்துவிட்டு கட்சியில் இருந்து வெளியேறிய சிலருடன் சத்யா கை கோர்த்து செயல்படுவதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். மல்லை சத்யா இனி தனது விருப்பப்படி முடிவெடுக்கலாம் எனவும் வைகோ கூறியுள்ளார்.

News July 10, 2025

கண்ணை மறைத்த காமம்.. கணவன் கொடூரக் கொலை!

image

முறையற்ற உறவால் கணவன்கள் கொல்லப்படும் கொடூர சம்பவங்கள் தொடர்கதையாக நீண்டு கொண்டே இருக்கின்றன. உ.பி.யில் மனைவி ஷீபா, ஃபர்மான் என்பவருடன் நெருங்கிப் பழகியதை கணவன் இம்ரான் கண்டித்துள்ளார். இதனால், காதலனுடன் சேர்த்து கணவனை தீர்த்துக் கட்டிய ஷீபா, கழுத்தை அறுத்து தலையில்லாத உடலை சாக்கடையில் வீசியுள்ளார். போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிய அவர், தற்போது காதலனுடன் கம்பி எண்ணுகிறார்.

error: Content is protected !!