News July 10, 2025
வேலூரில் குரூப்-4 தேர்வு எழுதும் 24,654 பேர்

வேலூர் மாவட்டத்தில் வரும் 12.7.2025 அன்று நடைபெறும் TNPSC குரூப்-4 தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 84 தேர்வு மையங்களில் மொத்தம் 24,654 தேர்வர்கள் தேர்வை எழுத உள்ளனர். இது தொடர்பாக ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார். தேர்வர்கள் நேரத்திற்கு முன்னதாக மையத்துக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News July 10, 2025
பேருந்தில் சில்லறை வாங்கவில்லையா? DON’T WORRY

பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு(9445021303). *செம திட்டம் ஷேர் பண்ணுங்க*
News July 10, 2025
வேலூர்: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வர். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை(0416-2252345) அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17015879>>தொடர்ச்சி<<>>
News July 10, 2025
கலைஞர் கனவு இல்லத் திட்ட விவரங்கள்

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. *சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க*