News July 10, 2025
அரியலூர்: திருமண வரமளிக்கும் பஞ்சநதீஸ்வரர்

அரியலூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள குரும்பலூரில் பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பஞ்சபூதங்களை விளங்கும் வகையில் நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சலிங்க சிலைகள் உள்ளன. மேலும் நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்கள் இக்கோவிலில் சிவன்- அம்பாள் திருக்கல்யாணத்தில் பங்கேற்று வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சேர் செய்யவும்.
Similar News
News July 10, 2025
அரியலூர்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. குறைந்தது 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும்.
News July 10, 2025
அரியலூர்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை VAO-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் VAO யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், அரியலூர் மாவட்ட மக்கள் 04329-228442 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க
News July 10, 2025
அரியலூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் 383 பேர் கைது

மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு முழுவதிலும் போராட்டம் நடத்தினர். அந்தவகையில் அரியலூர் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 383 பேரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.