News July 10, 2025
மயிலாடுதுறை காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள்

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.மாவட்ட எஸ்.பி . பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 14 புகார் மனுக்கள் மீது நேரடி விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார். காவல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட 4 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தார்.
Similar News
News July 10, 2025
மயிலாடுதுறை : VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை விஏஓ-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், மயிலை மாவட்ட மக்கள் 04364-299952 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க
News July 10, 2025
மயிலாடுதுறையில் முக்கிய ஊர்களின் முற்கால பெயர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் பல வரலாறுகளை கொண்டுள்ளது. அவ்வாறு உள்ள மாவட்டத்தின் முக்கிய ஊர்கள் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை காண்போம். மயிலாடுதுறை – மாயவரம், செம்பனார்கோவில் – இந்திரபுரி, பூம்புகார் – காவிரிப்பூம்பட்டினம், சீர்காழி – பிரம்மபுரம், குத்தாலம் – திருத்துருத்தி, மணல்மேடு – நாகநாதபுரம், தரங்கம்பாடி – ட்ரான்கேபார் என அழைக்கப்பட்டது. தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News July 10, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட போலீசார் இன்று இரவு (ஜூலை 9) 11 மணி முதல் நாளை (ஜூலை 10) காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் காவல்துறை அதிகாரிகள் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள காவல் அதிகாரிகளின் நேரடி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.