News July 9, 2025
பட்டாசு ஆலைகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விதிமீறல்கள் நடந்திருப்பது உறுதியானால் ஆலைகளை மூடுவது பற்றி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட விபத்து நடக்கக் கூடாது என திட்டவட்டமாக ஆணையம் தெரிவித்துள்ளது.
Similar News
News July 10, 2025
தமிழகத்தில் 4,000 காலிப்பணியிடங்கள்

அந்தந்த மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் 2,500 செவிலியர்கள், 1,500 மருந்தாளுநர்கள் & லேப் டெக்னீசியன்களை நியமிக்க தேசிய நலவாழ்வு குழுமம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இதனை MRB நிரப்பி வந்த நிலையில், இம்முறை மாற்றப்பட்டுள்ளது. இப்பணியானது தற்காலிகமானது. மேலும், 11 மாத கால ஒப்பந்தத்தில் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே, இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் மாவட்டந்தோறும் வெளியாகும்.
News July 10, 2025
‘றெக்க மட்டும் இருந்தா தேவதை மச்சான்’

பிரியா பவானி ஷங்கர் மாடர்ன் டிரஸ்ஸில் மயக்கும் போட்டோஷூட் நெட்டிசன்களை கிறங்கடித்துள்ளது. ‘பேசும் பார்வை கண்களின் நயம், பிரியாவின் நிழலில் பொழியும் நயம்’ என கவிதை தான் எழுத தோன்றுகிறது. ‘இவ்வளோ அழகா இருக்குறது ரொம்ப தப்பு மேடம்’ என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அவர் ‘டிமான்டி காலனி 3’ படத்தில் நடித்து வருகிறார். உங்களுக்கு பிடிச்ச பிரியா பவானி ஷங்கர் படம் எது?
News July 10, 2025
ஸ்மார்ட்போன்கள் விலை கணிசமாக குறையும்..!

செல்போன்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கவுண்டர் பாயிண்ட் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தாண்டின் முதல் 6 மாதங்களில் பல பிராண்டுகளின் செல்போன்கள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், கையிருப்பைக் குறைக்க பெரும் தள்ளுபடியை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டிகை நாள்களில் OnePlus, Xiaomi, iQOO, Realme, Oppo, Nothing பிராண்டுகள் தள்ளுபடியை வழங்க வாய்ப்புள்ளதாம்.