News July 9, 2025

திருச்சி: பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

image

திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் எஸ்பி செ.செல்வநாகரத்தினம் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (09.07.2025) நடைபெற்றது. இதில் மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்களிடமிருந்து 30மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News July 10, 2025

கடலூர் ரயில் விபத்து: திருச்சியில் 11 பேர் ஆஜர்

image

கடலூர் அருகே செம்மங்குப்பம் நேற்று முன்தினம் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பாக 13 பேருக்கு ரயில்வே நிர்வாகம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் இன்று ரயில் லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த் சிங், அஜித்குமார், விமல், அங்கித் குமார், ஆனந்த், வடிவேலன் உட்பட 11 பேர் இன்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

News July 10, 2025

திருச்சி : VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை விஏஓ-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க

News July 10, 2025

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

image

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவா்களுக்கு வரும் ஜூலை13 அன்று இலவச சதுரங்க பயிற்சி காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும், காலை 10.30 முதல் நண்பகல் 12.30 மணி வரை பள்ளி சிறாா்களுக்கான கிராஃப்ட் காகிதங்களை கொண்டு உருவங்களை உருவாக்கும் ‘ஓரிகாமி’ பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாணவா்கள், பங்கேற்று பயன்பெற மாவட்ட நூலக அலுவலா் கேட்டு கொண்டுள்ளார்.

error: Content is protected !!