News July 9, 2025
காதலியை ஐபிஎஸ் ஆக்க இப்படி ஒரு வழியா?

வடமாநிலங்களில் வேண்டுதலுக்காக பக்தர்கள் கங்கை நீர் காவடி சுமக்கும் வழக்கம் உண்டு. அப்படி ஹரித்துவாரில், காவடியில் இருபுறமும் கங்கை நீரை சுமந்துகொண்டு வந்த இளைஞர் கவனம் ஈர்த்துள்ளார். அவரின் வேண்டுதல் என்ன தெரியுமா? அவரின் காதலி இப்போதுதான் பிளஸ் டூ முடித்துள்ளாராம். அவர் படித்து ஐபிஎஸ் ஆகும்வரை கங்கை காவடி தூக்குவதாக வேண்டுதலாம். ஐபிஎஸ் ஆனபின் அப்பெண்ணை கல்யாணம் செய்துகொள்வாராம்.
Similar News
News July 10, 2025
வார விடுமுறை… நாளை முதல் ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு

வார விடுமுறை நாள்களில் மக்கள் நெரிசலின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை (ஜூலை 11) முதல் ஜூலை 13 வரை முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT.
News July 10, 2025
ஜூலை 10.. வரலாற்றில் இன்று!

*988: டப்ளின் நகரம் நிறுவப்பட்டது.
*1739: நாதிர் ஷா செங்கோட்டையை கொள்ளையடித்தார்.
*1778: பிரான்சின் லூயிஸ் XVI கிரேட் பிரிட்டன் மீது போரை அறிவித்தார்.
*1947: இந்தியாவின் முதல் PM ஜவஹர்லால் நேரு, செங்கோட்டையின் லாஹோரி வாயிலில் இந்தியக் கொடியை ஏற்றினார். *1949: தஜிகிஸ்தானின் கைடு பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி 7,200 பேர் உயிரிழந்தனர்.
News July 10, 2025
சாலை இல்லை, ₹5000 கோடி எங்கே? அண்ணாமலை கேள்வி

மத்திய அரசு ₹5000 கோடிக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சுமத்தியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசின் திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என அறிவிப்பு வெளியிட்டதாகவும் ஆனால் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட கடந்த 4 ஆண்டுகளாக திமுக அரசு நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ளார்.