News July 9, 2025
தி.மலையில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு!

மாற்றுத்திறனாளிகளின் குறித்த விவரங்களை சேகரிக்க வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியை ஜூலை 10 முதல் முன் களப்பணியாளர்கள் மேற்கொள்ள உள்ளனர். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்களை முன்களப் பணியாளர்கள் சேகரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News July 10, 2025
ரோந்து பணி காவலர்களின் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News July 10, 2025
குரூப் 4 தேர்வுக்கு 48,323 பேர் விண்ணப்பம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 12ம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் குரூப் 4 தேர்வை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வுக்கு 48 ஆயிரத்து 323 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
கடன் தொல்லை நீக்கும் கால பைரவர்

திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரை அருகே கால பைரவர் சன்னதி உள்ளது. இங்குள்ள பைரவர் ஒரே கல்லால் 8 கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக, இங்கு பைரவர் வீற்றிருக்கிறார். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.