News July 9, 2025

மயிலாடுதுறை: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 1/2

image

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<<17003354>>பாகம்-2<<>>). SHARE பண்ணுங்க.

Similar News

News July 10, 2025

மயிலாடுதுறை காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.மாவட்ட எஸ்.பி . பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 14 புகார் மனுக்கள் மீது நேரடி விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார். காவல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட 4 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தார்.

News July 9, 2025

மயிலாடுதுறையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் நடைபெறும் இந்த முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. வேலை தேடும் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News July 9, 2025

மயிலாடுதுறை: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 2/2

image

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு திருச்சியில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை.
▶️உரிய ஆவணங்களுடன் https://ssc.gov.in/home/apply எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.

error: Content is protected !!