News July 9, 2025
உள்ளூர் வங்கியில் வேலை ரூ.85,000 வரை சம்பளம்

கரூர்: பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பதார்கள் தமிழ் மொழி பேச, எழுத மற்றும் படிக்க கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க <
Similar News
News July 9, 2025
ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.50,000 திருமண உதவி!

தமிழக அரசு சார்பில், பெற்றோரில்லாத பெண்களுக்காக, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, கரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றோ அல்லது இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<17007892>>(தொடர்ச்சி 1/2)<<>>
News July 9, 2025
திட்டத்திற்கான தகுதிகள் என்ன?

▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
News July 9, 2025
கரூர் வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்

ரெயில்வே தண்டவாளங்கள் புதுப்பிக்கும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. இந்த பணிகள் வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16322) கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஆகஸ்ட் 31 வரை கரூர் வழியாக திண்டுக்கல் வரை மட்டுமே செல்லும். திண்டுக்கல் – நாகர்கோவில் இடையேயான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.