News April 6, 2024

எனக்கு இது 5ஆவது திருமணம்

image

எனக்கு திருமணம் என்று பரவி வரும் வதந்திகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நடிகை அஞ்சலி திட்டவட்டமாக கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “வதந்திகள் மூலம் இதுவரை 4 முறை எனக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இது எனக்கு 5ஆவது திருமணம். நிச்சயமாக எனக்கு திருமணம் நடக்கும். ஆனால், இப்போது இல்லை. EMI-கள் நிறைய இருப்பதால், திருமணம் செய்யும் எண்ணம் தற்போது இல்லை” என்று கூறினார்.

Similar News

News April 21, 2025

பிடிஆர்-க்கே இந்த நிலையா? அவரே சொன்ன பதில்

image

கடலூரில் டைட்டல் பார்க் அமைக்க அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன், பேரவையில் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பிடிஆர், தனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. நிதியை அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதைக் கேட்டால் கிடைக்கும் எனத் தெரிவித்தார். பிடிஆர் நிதியமைச்சராக இருந்தபோது, சரியாக நிதி ஒதுக்கவில்லை என பலர் புலம்பினர். தற்போது PTR-க்கும் அதே நிலை வந்திருக்கிறது.

News April 21, 2025

பிசிசிஐ ஒப்பந்தத்தில் உள்ள இரு தமிழர்கள்…

image

நடப்பு ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் இரு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ‘C’ பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ₹1 கோடி சம்பளமாக வழங்கப்படும். வேறு எந்த தமிழக வீரரை ஒப்பந்தத்தில் சேர்ந்திருக்கலாம்னு நீங்க சொல்லுங்க…

News April 21, 2025

அமைச்சர் கே.என்.நேரு பொய் சொல்கிறார்: இபிஎஸ்

image

திருச்சி உறையூர் குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு தவறான தகவலை அளித்ததாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். வெக்காளியம்மன் கோயில் திருவிழாவில் கொடுத்த குளிர்பானத்தை அருந்தியதால் தான் மக்கள் பாதிக்கப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்றார். திருவிழாவில் உறையூர் மக்கள் மட்டுமே பங்கேற்றார்களா? அப்படியெனில் மற்ற பகுதி மக்களுக்கு ஏன் பாதிப்பு ஏற்படவில்லை என கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!