News July 9, 2025

கடலூர் துயரம்: கிருஷ்ணசாமி பள்ளிக்கு இன்றும் விடுமுறை

image

விபத்து நிகழ்ந்து 24 மணி நேரம் கடந்த போதிலும் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் சோகத்தின் தடம் மாறவில்லை. விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் செழியன், சாருமதி, நிமிலேஷ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றும் கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சக மாணவர்கள், ஆசிரியர்கள் சாருமதிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய காட்சிகள் காண்போரையும் கண்கலங்க வைத்தது.

Similar News

News July 9, 2025

₹10 யாசகம் போட்ட பெண்.. ரஜினிகாந்த் பேச்சு வைரல்

image

தனக்கு பெண் ஒருவர் ₹10 யாசகம் போட்டதாக ரஜினி பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது. பெங்களூருவில் உள்ள கோயிலுக்கு தாம் மாறு வேடத்தில் சென்று இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த பெண் தன் உருவத்தை பார்த்து பிச்சை எடுப்பவர் என கருதி ₹10 அளித்ததாகவும், அதை மறுக்காமல் தாம் வாங்கிக் கொண்டதாகவும், பிறகு உண்டியலில் தாம் ₹200 போட்டதை பார்த்து அவர் தன்னிடம் வருத்தம் தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.

News July 9, 2025

கேட் கீப்பர் தூங்கியதே விபத்துக்கு காரணம்!

image

கடலூர் செம்மங்குப்பத்தில் நேர்ந்த விபத்துக்கு கேட் கீப்பர் தூங்கியதே காரணம் என்பது தெரியவந்துள்ளது. 7.10 மணிக்கு ரயில் வருவது குறித்து அவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கேட்டை மூடாமல் மீண்டும் தூங்கியுள்ளார். கேட்டை மூட மறந்துவிட்டதாக பங்கஜ் சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். So Sad!

News July 9, 2025

4 ஆண்டுகளுக்கு பின் டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர்

image

3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர் இணைந்துள்ளார். 3-வது டெஸ்டுக்கான அணியில் ஒரு மாற்றத்தை இங்கிலாந்து அணி செய்துள்ளது. அதன்படி 4 ஆண்டுகள் கழித்து டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாட உள்ளார். முழு உடல் தகுதியை எட்டாததால் முதல் 2 டெஸ்டில் ஆர்சர் விளையாடவில்லை. ஜோஷ் டங்கிற்கு பதில் அவர் அணியில் இணைந்துள்ளதால் இங்கிலாந்து பந்து வீச்சு மேலும் வலுவடைந்துள்ளது.

error: Content is protected !!