News July 9, 2025

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்க்கான சிறப்பு முகாம்

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மூஞ்சிக்கல்லில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (கலையரங்க கூடத்தில்) ஜூலை.10 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான சிறப்பு முகாம் அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணிவரை நடைபெற உள்ளது. இதில் 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
இதில் அதார் நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படங்கள் 4 உடன் கலந்து கொள்ளலாம்.

Similar News

News August 25, 2025

திண்டுக்கல்: வாலிபர் துடிதுடித்து பலி!

image

திண்டுக்கல்: வத்தலகுண்டு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ்(22). த.மு.மு.க நிர்வாகியான இவர் தனது நண்பருடன் பைக்கில் பழைய வத்தலகுண்டுவிற்குச் சென்றுள்ளார். திரும்பி வரும் போது தேனி நோக்கி வந்த அரசு பஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 25, 2025

திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (ஆகஸ்ட் 24) இரவு 11 மணி முதல் நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளை முன்னெடுக்கிறது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் வெளியிட்ட தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 24, 2025

திண்டுக்கல்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

திண்டுக்கல்: வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.(SHARE IT)

error: Content is protected !!