News July 8, 2025
இரவு ரோந்துப் பணி செல்லும் போலீசாரின் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட போலீசார் இன்று இரவு (ஜூலை 8) 11 மணி முதல் நாளை (ஜூலை 9) காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் காவல்துறை அதிகாரிகள் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள காவல் அதிகாரிகளின் நேரடி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
மயிலாடுதுறை: ஐடிஐ, டிப்ளமோ போதும்.. அரசு வேலை..!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு BE / ஐடிஐ / டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூலை.12-க்குள் <
News July 9, 2025
மயிலாடுதுறை: குரூப் 4 தேர்வு- ஆட்சியர் அறிவுறுத்தல்

மயிலாடுதுறையில் குரூப் 4 தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்தில் 15,880 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வரவேண்டும். 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது. கால்குலேட்டர், டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட எவ்வித சாதனங்களையும் தேர்வு கூடத்திற்கு எடுத்து வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
இரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்; ரயில்வே அறிவிப்பு

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் விழுப்புரம் வழியாக இயக்கப்படும் சில ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து பகல் 2:35 மணிக்கு புறப்படவேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் (எண் 66019), ஜூலை 12 மற்றும் 15ம் தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக 3:05 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும் என திருச்சி தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.