News July 8, 2025

நொரம்பு மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

image

பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதியான எர்ரணஅள்ளி மேம்பாலம் அருகே காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஏரியில் இருந்து சட்டவிரோதமாக நொரம்பு மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தினர். காவலர்களைக் கண்டதும் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவானார். சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Similar News

News July 9, 2025

தர்மபுரியில் மகளிர் உரிமை தொகை குறித்து அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்குச் சென்று விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பத்தினை அளிக்கலாம். இந்த முகாமானது வரும் 15 ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெறுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். *SHAREIT*

News July 9, 2025

தருமபுரி மாவட்டத்தில் பேச்சுப் போட்டிகள் தேதி அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர்,முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளுக்கான பேச்சுப் போட்டிகள் முறையே 16,17 தேதி ஆகிய நாள்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 வரை மட்டும் கலந்து கொள்ளலாம்.

News July 8, 2025

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம்

image

தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வருகிற 09.07.2025 அன்று காலை 10 மணி அளவில் நல்லம்பள்ளி வட்டம், இண்டுர் உள்வட்டம். சோமனஅள்ளி கிராமத்தில் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு முறை குறித்து விவசாயிகள் தெரிந்து கொண்டு செயல்படுத்தும் நோக்கில் முகாம் நடைபெற உள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!