News July 8, 2025

திருச்சி: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <>உழவன் App மூலமாக <<>>விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை (04312332447) அணுகவும். இத்தகவலை அனைவருக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News July 9, 2025

திருச்சி: ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க விருது

image

சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதும், ரூ.1 கோடி பணமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான இந்த விருதை பெற விரும்பும் ஊராட்சிகள், உரிய ஆவணங்களுடன் https://tinyurl.com/panchayataward என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News July 8, 2025

திருச்சி: சாலையோர பூங்காவிற்கு பொதுமக்கள் வரவேற்பு

image

திருச்சி, தென்னூர் அண்ணா நகர் பகுதியில், சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில், சாலையோர பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு பூங்கா திறக்கப்பட்டது. செல்பி பாயிண்டுடன் கூடிய இப்பூங்கா பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

News July 8, 2025

திருச்சி: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (1/2)

image

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க! <<16989920>>(பாகம்-2)<<>>

error: Content is protected !!