News July 8, 2025

மயிலாடுதுறை: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. தேர்வு மையம் தஞ்சை, கடலூர் உட்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். மேலும் கடைசி நாள் ஜூலை 24ம் தேதி ஆகும். SHARE பண்ணுங்க.!

Similar News

News July 9, 2025

இரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்; ரயில்வே அறிவிப்பு

image

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் விழுப்புரம் வழியாக இயக்கப்படும் சில ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து பகல் 2:35 மணிக்கு புறப்படவேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் (எண் 66019), ஜூலை 12 மற்றும் 15ம் தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக 3:05 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும் என திருச்சி தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News July 9, 2025

குரூப் 4 தேர்வு; ஆட்சியர் அறிவிப்பு

image

குரூப் 4 பணிக்கான தேர்வு வருகிற சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 15,880 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வரவேண்டும் 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது, கால்குலேட்டர், டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட எவ்வித சாதனங்களையும் தேர்வு கூடத்திற்கு எடுத்து வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 8, 2025

இரவு ரோந்துப் பணி செல்லும் போலீசாரின் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட போலீசார் இன்று இரவு (ஜூலை 8) 11 மணி முதல் நாளை (ஜூலை 9) காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் காவல்துறை அதிகாரிகள் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள காவல் அதிகாரிகளின் நேரடி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!