News July 8, 2025
விதி மீறிய 2 பட்டாசு ஆலைகளுக்கு சீல்

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கங்கரக்கோட்டையில் விதிமீறல் இருந்ததாக சீல் வைக்கப்பட்ட பால்பாண்டியன் (45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு உற்பத்தி செய்ததாக ஆலைக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது. இதேபோல் சேர்வைக்காரன்பட்டியில் விதியை மீறிய பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோல் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு பற்றி 9443967578 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
Similar News
News July 9, 2025
பயிர்களுக்கு உடனடியாக காப்பீடு செய்யலாம் – ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 காரீப் பருவத்தில் சோளம், பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, பருத்தி, தோட்டக்கலைப் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். பயிர்களுக்கான காப்பீட்டை அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி பயன்பெறலாம்.
News July 8, 2025
பட்டாசு ஆலை ஆய்வு குழு லஞ்சம் பெறுகிறார்களா?

சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலை வெடி விபத்துக்களை தடுக்க ஆய்வு குழு அமைக்கப்பட்டு பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆய்வு செய்யப்படும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஆய்வு குழு லஞ்சம் பெறப்படுவதாகவும், எந்தெந்த துறை அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் வழங்கப்படுகிறது என்பது குறித்தான பட்டியல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News July 8, 2025
விருதுநகரில் நாளை பட்டா மாற்றம் செய்யலாம்

விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து நாளை(ஜூலை.9) காலை 10 மணிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் முன்னோர்களின் பெயரில் உள்ள பட்டா மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் இதில் கலந்து பாட்டாக்களை தங்கள் பெயரில் மாற்றிக்கொள்ளலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.