News July 8, 2025

மனைவியை நிர்வாணமாக படம் பிடித்த கணவன்

image

மனைவியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட போவதாக மிரட்டிய கணவனை மதுரவாயல் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் 28 வயது இளம்பெண், 26 வயதுடைய கொரியர் நிறுவன சூப்பர்வைசரை கடந்த ஆண்டு திருமணம் செய்து மதுரவாயலில் வசித்து வந்தார். சுற்றுலா செல்லும்போது நிர்வாணமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய கணவர் மீது மனைவி போலீசில் புகார் அளித்தார்.

Similar News

News August 24, 2025

சென்னை வாசிகளுக்கு முக்கிய எண்கள்

image

சென்னையில் தற்போது கன மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதியில் மின்தடை, மின்னழுத்த பிரச்சனை, மின்கம்பம் சேதம் ஆகிறது. இதுகுறித்து புகார் அளிப்பதற்கு “94987-94987” என்ற எண்ணை அழைக்கலாம். அல்லது “94458-50811” என்ற எண்ணுக்கு முகவரி, புகைப்படத்துடன் What’s App பண்ணலாம். இது போன்ற முக்கிய தகவல்களை மக்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 24, 2025

சென்னை கலெக்டர் அறிவிப்பு

image

பெற்றோர் இருவரையும் இழந்த மற்றும் ஒரு பெற்றோரால் கைவிடப்பட்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்பு கரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

News August 24, 2025

சென்னை மாநகராட்சியின் அதிரடி திட்டம்

image

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 75 இடங்களில் சுற்றுச்சூழல் கண்காணிப்பு கருவிகளை பொருத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ‘IoT-based environmental sensors’ என்ற கருவி மூலம், வெப்பம், ஈரப்பதம், மாசு அளவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். இது நடைமுறைக்கு வந்தால் இந்தியாவிலேயே இத்தகைய கருவிகள் பொருத்தும் முதல் நகரமாக சென்னை மாறும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!