News July 8, 2025
புதுவை: சீருடை பணியாளர்கள் நிலுவை படி குறித்து அறிவிப்பு

புதுச்சேரி அரசு நிதித்துறை செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுவை அரசின் 7-வது ஊதிய குழுவின் படி சீருடை பணியாளர்களுக்கு, சீருடை உள்ளிட்ட பல்வேறு படிகளை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதுவை காவல்துறை மற்றும் ஊர்காவல் படையினருக்கு 1.7.2017 முதல் 31.3.2021 வரை நிலுவையில் உள்ள சீருடை படி வழங்கப்பட உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
புதுச்சேரி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்

➡️ நெட்டப்பாக்கம் – பெ. இராசவேலு (8300218103)
➡️ கதிர்காமம் – எஸ். ரமேஷ் (7708512345)
➡️ மாகே – இரமேஷ் பரம்பத்து (9447360415)
➡️நெல்லித்தோப்பு – ரிச்சர்ட் ஜான்குமார் (9629992365)
➡️ முதலியார்பேட்டை – எல். சம்பத் (9443287521)
➡️ மணவெளி – ஏம்பலம்.செல்வம் (9843444799)
இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!.
News July 8, 2025
புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிப்பு

வில்லியனூரை தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் ஆன்லைன் கடன் செயலியில் கடன் பெற்றார்.அவர் கடனை திரும்பி செலுத்திய பின்னரும் ஆன்லைன் கும்பல் பணம் கேட்டு மிரட்டியது.மேலும் அவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்திலும் அவரின் உறவினருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டல் விடுத்து ரூபாய் 8,838 பெற்றனர் .அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப் பதிந்தனர்.
News July 8, 2025
“விரைவில் ஆதார் அடிப்படையில் இலவச அரிசி” – அமைச்சர் தகவல்

காரைக்காலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன், “அரசின் இலவச அரிசியானது உரியவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்.வேறு யாரும் இதனால் ஆதாயம் அடையக் கூடாது என்ற நோக்கில் ஆதார் அடிப்படையில் அரசின் இலவச அரிசியானது வழங்க உத்தேசிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.