News July 8, 2025

வாடகை வீட்டில் குடியிருப்பவரா நீங்கள்? 2/2

image

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. 3 மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும் SHARE IT

Similar News

News July 9, 2025

கிருஷ்ணகிரியில் சீட்டாட்டம்: 7 பேர் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை போலீசார் நாயக்கனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய மோகன் (28), பசுபதி (31), ஜெயக்குமார் (30), தனிஷ் (22), கார்த்திகை (27), சக்திவேல் (29), திருப்பதி (27) ஆகிய 7 பேரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News July 8, 2025

கிருஷ்ணகிரியில் மான் கறி வைத்திருந்த இருவருக்கு அபராதம்

image

அஞ்செட்டி வனத்துறையினர் பூ மரத்துக்குழி பகுதியில் நேற்று (ஜூலை 7) இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சித்தாண்டபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (27) மற்றும் பிலிகுண்டுவை சேர்ந்த ஜாக்சன் (37) ஆகிய இருவரை வனத்துறை விசாரித்ததில் அவர்கள் இருவரும் 8 கிலோ மான் கறியை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து இருவருக்கும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News July 8, 2025

ஓலாவில் வேலை வாங்குவதாக கூறி மோசடி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் OLA நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலியான பணியாணை வழங்கி 56 நபர்களிடம், ரூ.22 லட்சம் மோசடி செய்த மனோ, சதீஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆணைகளுடன் ஓலாவுக்கு வேலைக்கு சென்றபோது, அந்தப் பணி ஆணையை நாங்கள் தரவில்லை என நிறுவனத்தில் கூற, இம்மோசடி அம்பலமானது.

error: Content is protected !!