News July 8, 2025
இந்தியாவின் ஒட்டக படை தெரியுமா?

ஏவுகணைகளை வைத்து தாக்கும் இக்காலத்திலும், இந்தியாவின் BSF-ல் ஒட்டக படை உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத ராஜஸ்தானின் தார் பாலைவன எல்லையில் இந்த வீர ஒட்டகங்கள் 24×7 ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. 1965-ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரிலும் இவை பங்கேற்றுள்ளன. தற்போது 1,200 ஒட்டகங்கள் BSF-ல் உள்ளன. 1976 முதல் குடியரசு தின அணிவகுப்பில், இந்த வீர ஒட்டகங்கள் வண்ணமய ஆடைகளுடன் அணிவகுப்பில் பங்கேற்கின்றன.
Similar News
News September 14, 2025
சிலருக்கு பிரதமரை பாராட்ட மனமில்லை: நிர்மலா

GST குறித்து ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த GST விழிப்புணர்வு நிகழ்வில் பேசிய அவர், GST வரி குறைப்பில் மாநிலங்களுக்கே அதிக பங்கு உண்டு என்றாலும், சிலருக்கு பிரதமரை பாராட்ட மனமில்லை என்று CM ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தார். GST சீர்திருத்தத்தால் 140 கோடி மக்களின் வரிச்சுமை குறைந்துள்ளதாகவும் பேசியுள்ளார்.
News September 14, 2025
மடியில் குழந்தையுடன் DSP இன்டர்வியூ வந்த பெண்!

தாய் பாசத்தை வெல்ல இந்த உலகில் வேறெதுவும் இல்லை என்பதற்கு இந்த சம்பவமும் சான்று. ம.பி.யின் Public Service Commission நேர்காணலில், வர்ஷா படேல் தனது 20 நாட்களே ஆன குழந்தையை மடியில் தாங்கியபடி பங்கேற்றுள்ளார். கர்ப்பமாக இருந்தபோது தேர்வெழுதி 11-வது ரேங்க் பிடித்த வர்ஷா, குழந்தையுடனே நேர்காணலை சந்தித்தார். தாயாகிய உறுதியும், பெண்மையின் சக்தியும் ஒருசேர அவர் DSP-யாக தேர்வாகி இருக்கிறார்.
News September 14, 2025
BREAKING: முடிவை மாற்றினார் இபிஎஸ்.. முக்கிய அறிவிப்பு

நாளை மறுநாள், EPS டெல்லி செல்வதால் தருமபுரி சுற்றுப்பயண தேதி மாற்றப்பட்டுள்ளது. அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் தொடர்பாக, செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், EPS-ம் டெல்லி செல்ல உள்ளார். இதனால், அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தருமபுரி மாவட்ட சுற்றுப்பயணம் வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளுக்கு பதிலாக 28, 29-ம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.