News July 8, 2025
கடலூர் கோர விபத்து: இபிஎஸ் இரங்கல்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் <<16987572>>பள்ளி வேன் மீது ரயில்<<>> மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என இறைவனை வேண்டுவதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News July 8, 2025
2-வது டெஸ்டிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி

2-வது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா கேப்டன் முல்டரின்(367) முச்சதத்தால் 626 ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா டிக்ளேர் செய்ததால் களமிறங்கிய ஜிம்பாப்வே 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாலோ ஆன் ஆனது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 220 ரன்களில் ஆல் அவுட்டாகியது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
News July 8, 2025
இசையமைப்பாளர் கீரவாணி தந்தை காலமானார்

AR ரஹ்மானுக்கு பிறகு இந்தியாவில் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி. இவரின் தந்தையும், பாடலாசிரியருமான சிவ சக்தி தத்தா(83) வயது மூப்பால் காலமானார். தனது கவித்துவமான வரிகளை கொண்டு பாகுபலி, RRR உள்பட பல்வேறு படங்களுக்கு ஹிட் பாடல்களை அவர் எழுதியுள்ளார். சிவ சக்தி தத்தா மறைவுக்கு சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News July 8, 2025
சுக்கிரன் பெயர்ச்சி.. 5 ராசியினருக்கு ஜாக்பாட்!

சுக்கிர பகவான் இன்று (ஜூலை 8) ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்திருப்பதால் 5 ராசியினருக்கு நிதி நிலைமை மேம்படுமாம். *ரிஷபம்: திடீர் பண ஆதாயம் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு. *மிதுனம்: வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். *கன்னி: புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். *துலாம்: பண ஆதாயம் அதிகரிக்கும். *விருச்சிகம்: தொழில் வளர்ச்சி அடையும். செல்வம் பெருகும்.