News July 8, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்வு எழுதும் 15,880 பேர்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 12.7.2025 சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 52 தேர்வு கூடங்களில் மொத்தம் 15880 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு எழுதுபவர்களுக்கு பேருந்து வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவசர தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 8, 2025

மயிலாடுதுறை: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. தேர்வு மையம் தஞ்சை, கடலூர் உட்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். மேலும் கடைசி நாள் ஜூலை 24ம் தேதி ஆகும். SHARE பண்ணுங்க.!

News July 8, 2025

அரசு ஐடிஐ-க்களில் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சோ்க்கைக்கு 10, 12 தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். சோ்க்கைக்கு வரும்போது கைப்பேசி, ஆதாா் அட்டை, மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் & புகைப்படம் எடுத்து வர வேண்டும். மேலும் தகவலுக்கு 94990-55737 தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News July 8, 2025

மயிலாடுதுறை: 10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை

image

மயிலாடுதுறை மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10, 12, ஐ.டி.ஐ முடித்தவர்கள் <>www.rrbapply.gov.in<<>> என்ற இணையம் வாயிலாக ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளமாக வழங்கப்படும். இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!